Saturday, December 20, 2008

எனக்காக வரமாட்டாயா?







நன்றாக இருந்திருக்கும்..............



அவள் என்னுடன் இருந்திருந்தால் .



உலகம் சுற்றும் என்னுடன் , என் உலகை பகிர்ந்துகொள்ள அவள் வேண்டும்






காதல் இத்தனை வலியதாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் என்மனதிற்கினிய தோழியை நான் பிரிந்திருக்கவே மாட்டேன் .






சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் ,தோள்களை இறுக்கி அணைத்து கழுத்தில் முத்தம் பதிக்க வேண்டும் .






என் குழந்தையாய் உன்னை சுமக்க வேண்டும் .






என் குழந்தைகளின் பிரிய அம்மாவாக உன் தோற்றத்தை ரசிக்க வேண்டும் .






தவறு செயும்போது கண்டிக்கும் உன் நேர்மையை மதிக்க வேண்டும் .



பருத்தி புடவையில் திமிரும் உன் பெண்மையின் அழகை ரசிக்க வேண்டும் .




உன் வேதனையில் பாதியை சுமக்க வேண்டும்




உனக்கு எது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து பரிசளிக்க வேண்டும்




இத்தாலியின் தெருக்களில் உன் கை கோர்த்து நடந்து நீ ரசிக்கும் அழகை ரசிக்க வேண்டும்.




பனி படர்ந்த ஜெர்மன்யின் காட்டுக்குள் உன்னை முயங்க வேண்டும் .




ஒரு நாள் மட்டும் உன்னுடன் வாழ்ந்தாலும் போதும் என் தோழியே ...இத்தனை செய்யும் எனக்காக மறுபடி திரும்பி வரமாட்டயா.......




1 comment: